இச்1சா2 த்3வேஷ: ஸுக2ம் து3:க2ம் ஸங்கா41ஶ்சே11னா த்4ருதி1: |

ஏத1த்1க்ஷேத்1ரம் ஸமாஸேன ஸவிகா1ரமுதா3ஹ்ருத1ம் ||7||

இச்சா--—விருப்பம்; த்வேஷஹ---வெறுப்பு; ஸுகம்--—மகிழ்ச்சி; துஹ்கம்---—துன்பம்; ஸங்காதஹ--—திரள்; சேதனா--—உணர்வு; த்ருதிஹி---சித்தம்; ஏதத்--—இவை அனைத்தும்; க்ஷேத்திரம்--—செயல்பாடுகளின் களம்; ஸமாஸேன---—அடங்கிய; ஸ-விகாரம்—---மாற்றங்களுடன்; உதாஹ்ரிதம்--என்று கூறப்படுகிறது

అనువాదం

BG 13.7: ஆசை மற்றும் வெறுப்பு, மகிழ்ச்சி மற்றும் துன்பம், உடல், உணர்வு மற்றும் விருப்பம்--இவை அனைத்தும் களத்தையும் அதன் மாற்றங்களையும் உள்ளடக்கியது.

వ్యాఖ్యానం

ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது க்ஷேத்திரத்தின் (களம்) பண்புகளையும் அதன் மாற்றங்களையும் விளக்குகிறார்:

உடல்: செயல்பாடுகளின் துறை உடலை உள்ளடக்கியது ஆனால் அதை விட அதிகம். உடல் இறக்கும் வரை ஆறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது – அஸ்தி1 (இருப்புக்கு வருவது), ஜாயதே1 (பிறப்பு), வர்த4தே1 (வளர்ச்சி), விப1ரிநமதே1 (இனப்பெருக்கம்), அப1க்ஷியதே1 (துவண்டுபோவது), வினஶ்யதி1 (இறப்பு). ஆன்மாவின் உந்துதலுக்கு ஏற்றவாறு உடல் கடவுளில் அல்லது உலகில் மகிழ்ச்சியை தேடுவதற்கு ஆன்மாவுக்கு உதவுகிறது.

உணர்வு: இது உயிரைக் கொடுக்கும் சக்தி மற்றும் ஆன்மாவில் உள்ளது. இது உடலில் இருக்கும்பொழுது உடலுக்கு உயிர் சக்தியை அளிக்கிறது இது நெருப்பிற்கு வெப்பத்தை உண்டாக்கும் திறன் இருப்பது போல்தான், அதில் இரும்புக் கம்பியை வைத்தால், அந்தத் கம்பியும் நெருப்பில் இருந்து பெறும் வெப்பத்தால் சிவப்பாக மாறும். அதுபோலவே, ஆன்மா, தன்னுள் உள்ள உணர்வின் தரத்தை அளித்து, உடலை உயிராகக் காட்டுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு நனவை செயல்பாட்டின் ஒரு பண்பாக உள்ளடக்குகிறார்

விருப்பம்: இது உடலின் கூறுகளை சுறுசுறுப்பாகவும் ஒரு குறிப்பிட்ட திசையில் கவனம் செலுத்த வைக்கும் உறுதி. ஆன்மாவை செயல்பாடுகளின் மூலம் இலக்குகளை அடையச் செய்யும் மன விருப்பம் இதுவாகும். மன விருப்பம் என்பது ஆன்மாவால் ஆற்றப்படும் புத்தியின் ஒரு குணம். ஸத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகியவற்றின் தாக்கத்தால் சித்தத்தில் ஏற்படும் மாறுபாடுகள் 18.33-18.35 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

ஆசை: மனம் மற்றும் புத்தியின் செயலே ஏதாவது, ஒரு பொருள், சூழ்நிலை. ஒரு நபர் மற்றும் வேறு ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கான ஏக்கத்தை உருவாக்குகிறது. உடலைப் பற்றி விவாதிப்பதில், ஒருகால் அனேகமாக நாம் ஆசையை சாதாரணமாக எடுத்துக்கொள்வோம், ஆனால் ஆசைகள் இல்லாவிட்டால் வாழ்க்கையின் தன்மை எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! எனவே, செயல்களின் துறையை வடிவமைத்து, அதன் ஒரு பகுதியாக ஆசையை உள்ளடக்கிய ஒப்புயர்வற்ற இறைவன், இயற்கையாகவே அதைக் குறிப்பிடுகிறார். புத்தி ஒரு பொருளின் விருப்பத்தை பகுப்பாய்வு செய்கிறது, மேலும் மனம் அதை விரும்புகிறது. ஒருவன் தன்னை உணர்ந்து கொள்ளும்பொழுது, ​​அனைத்து பொருள் ஆசைகளும் அழிந்து, இப்பொழுது தூய்மை அடைந்த மனம் கடவுளின் மீது ஆசையை வளர்க்கிறது. அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும்  பொருள் ஆசைகளுக்கு மாறாக ஆன்மீக ஆசைகள் விடுதலைக்கு வழிவகுக்கும்

வெறுப்பு: இது மனம் மற்றும் புத்தியின் நிலையாகும் மனமும் புத்தியும் விரும்பத்தகாததாக கண்டறிந்த விஷயங்கள் நபர்கள் மற்றும் சூழ்நிலைகளின் மீது வெறுப்பை உருவாக்கி அவற்றைத் தவிர்க்க முயல்கிறது.

மகிழ்ச்சி: இது இணக்கமான சூழ்நிலைகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் மனதில் அனுபவிக்கும் இன்ப உணர்வு. மனம் மகிழ்ச்சியின் உணர்வுகளை உணர்கிறது, மேலும் தன்னை மனதுடன் அடையாளப்படுத்தும் ஆன்மா மனதுடன் சேர்ந்து இந்த உணர்வுகளை உணருகிறது. இருப்பினும், பொருள் மகிழ்ச்சியானது ஆன்மாவின் பசியை ஒருபொழுதும் தீர்க்காது, அது கடவுளின் எல்லையற்ற தெய்வீக பேரின்பத்தை அனுபவிக்கும் வரை அதிருப்தியுடன் இருக்கும்.

துன்பம்: இது ஒத்துக்கொள்ள முடியாத சூழ்நிலைகளால் மனதில் ஏற்படும் வலி.

இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவர் அறிவை வளர்க்க உதவும் நல்லொழுக்கங்கள் மற்றும் பண்புக்கூறுகளை விவரிக்கிறார், அதன் மூலம் மனித வடிவமான செயல்பாடுகளின் துறையின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
13. க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency